Saturday, January 23, 2016

காலையில் மலர்ந்திடும்

பூ போன்ற வாழ்க்கை...

பல்லவி:
காலையில் மலர்ந்திடும்
மாலையில் உலர்ந்திடும்
பூவைப்போல் உன் வாழ்வு
சடுதியில் மறைந்திடும்
மனிதனே நீ இன்று
மண்மீது இருக்கின்றாய்
உன் மூச்சு நிற்குமே
மண்ணுள்ளே செல்வாயே

1. பூவுலகில் மண்ணோடு வாழ்கின்ற நீ
வானுலகில் வாழ்ந்திட என்ன செய்தாய்?
மரணம் வருவதை யார் இங்கு சொல்வது?
தருணம் இதுவென இறைவன் அழைப்பாரே

பல்லவி

2. புவிதன்னில் பிறக்கையில் அழுகின்ற நீ
பிரியும்போது பிறரை அழ வைக்கின்றாய்
துக்கம் ஏனோ, துயரம் ஏனோ
கலக்கம் ஏனோ, நடுக்கம் ஏனோ
இன்பமிதே பேரின்பமிதே
சேருமிடம் நித்திய வீடல்லவா

பல்லவி

No comments:

Post a Comment