Sunday, February 07, 2016

துதிக்கிறோம் இயேசுவைத் துதிக்கிறோம்

இயேசுவைத் துதிக்கிறோம்!

துதிக்கிறோம் இயேசுவைத் துதிக்கிறோம் - எங்கள்
துதிகளின் தேவனைத் துதிக்கிறோம்

அனுபல்லவி:
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா - அந்த
ராஜாவின் பிள்ளைகளாய் துதிக்கிறோம்

1. பாவங்களை மன்னித்தீரே துதிக்கிறோம் - பொல்லா
சாபங்களைத் தள்ளினீரே துதிக்கிறோம்
ரோகங்களைத் தீர்த்தவரே துதிக்கிறோம் - இனிய
ராகங்களைத் தந்தீர் பாடித் துதிக்கிறோம்

அனுபல்லவி

2. சோதனையில் தாங்கினீரே துதிக்கிறோம் - பெரும்
வேதனையைப் போக்கினீரே துதிக்கிறோம்
வியாதியிலே வைத்தியரே துதிக்கிறோம் - கடும்
வியாகுலத்தில் தேற்றினீரே துதிக்கிறோம்

அனுபல்லவி

3. காலை மாலை எப்பொழுதும் துதிப்போமே - எந்தக்
காலத்திலும் நேரத்திலும் துதிப்போமே
ஜீவனைக் கொடுத்தவரைத் துதிக்கிறோம் - என்றும்
ஜீவனோடிருப்பவரைத் துதிக்கிறோம்

அனுபல்லவி

No comments:

Post a Comment