Thursday, January 07, 2016

கல்வாரி சிலுவையில்

நான் எம்மாத்திரம்!

1. கல்வாரி சிலுவையில்
எனக்காய் மரித்த இயேசுவே
இவ்வளவாய் அன்புகூர நான்
எம்மாத்திரம் இயேசுநாதா

பல்லவி:
நான் எம்மாத்திரம், நான் எம்மாத்திரம்
நான் எம்மாத்திரம் இயேசுநாதா
இவ்வளவாய் அன்புகூர நான்
எம்மாத்திரம் இயேசுநாதா

2. உம் திரு இரத்தத்தின்
சொட்டுகள் தெறித்தன குருசில்
அந்த சொட்டுகள் ஒவ்வொன்றிற்கும் நான்
என்ன ஈவேன் விலையாய்

பல்லவி

3. கொடியவர் மனிதர்கள்
கோரமாய் உம்மை வதைத்தனர்
நீர் துடித்தீர் வேதனையினால்
எனக்காய் அல்லோ இரட்சகா

பல்லவி

No comments:

Post a Comment